Friday, May 31, 2024

1069. அதனினும் கொடிது

"எனக்கு மனசை ரொம்ப கஷ்டப்படுத்தற விஷயம் எது தெரியுமா?" என்றான் பரந்தாமன்.

"எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் அவன் நண்பன் கணேசன்.

"என்னோட இத்தனை வருஷம் பழகி இருக்கியே, அதை வச்சு சொல்ல முடியாதா?"

"ம்.. இரு, யோசிச்சுப் பாக்கறேன். பொதுவா, மத்தவங்க கஷ்டப்படறதைப் பார்த்தா, உனக்கு வருத்தமா இருக்கும்."

"சரிதான். ஆனா, அதிலேயும், குறிப்பா ஒரு விஷயம், எனக்கு ரொம்ப மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்."

"என்ன அது?"

"ஒத்தர் ரொம்ப கஷ்டமான நிலையில, இன்னொருத்தர்கிட்ட போய் உதவி கேக்கறதைப் பார்த்தா, எனக்கு மனசே உடைஞ்சுடும்."

"பிச்சை எடுக்கறவங்களை சொல்றியா?"

"பிச்சை எடுக்கறது மட்டும் இல்ல, ஒத்தர் இன்னொருத்தரை அணுகி எந்த ஒரு உதவி கேக்கறதையும்தான் சொல்றேன். அப்படி உதவி கேக்கறப்ப, அவங்க எந்த அளவுக்குக் கூனிக் குறுகிப் போயிருப்பாங்கன்னு பாக்கறப்ப, இவங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படணும்னு தோணும்!"

கணேசன் மௌனமாக இருந்தான்.

"ஏண்டா, நான் சொல்றது தப்பா? நீ என்ன நினைக்கற?" என்றான் பரந்தாமன்.

"தப்பு இல்லை. அதை விட மோசமான நிலையில இருக்கறவங்க சில பேரைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன்!"

"ஒத்தர் கூனிக் குறுகி இன்னொத்தர்கிட்ட உதவி கேக்கறதை விடக் கொடுமை வேற என்ன இருக்க முடியும்?" என்றான் பரந்தாமன்.

"அப்படி ஒத்தர் உதவி கேக்கறப்ப, அவரோட நிலைமையைக் கொஞ்சம் கூட உணராம, அவங்களுக்கு உதவி செய்யற நிலைமையில இருந்துக்கிட்டு, 'முடியாது' ன்னு சொல்றாங்களே, அந்தக் கொடுமைதான் எனக்கு இன்னும் அதிக சங்கடத்தைக் கொடுக்கும்!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்: 
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால், என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும், இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால், உருகும் உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...