Sunday, March 27, 2022

562. மன்னிக்க முடியாது!

பொது மேலாளர் கஜேந்தரனின் முன், தலையைக் குனிந்தபடி நின்றான் பார்த்திபன்.

"மிஸ்டர் பார்த்திபன்! உங்களுக்கு மானேஜர் பொறுப்பு கொடுத்தது, உங்கள் டிபார்ட்மென்ட்டை நீங்கள் பொறுப்பாகப் பார்த்துக்கணுங்கறதுக்காக, உங்க பதவியைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கறதுக்காக இல்ல."

"சார்! நான் செஞ்சது தப்புதான். ஆனா, இதுதான் நான் செஞ்ச முதல் தப்பு. இதுதான் கடைசியாகவும் இருக்கும். நான் எந்த விதிமீறலையும் செய்யல. அந்த கான்டிராக்டர் தானே வந்து எனக்குப் பணம் கொடுத்தாரு. 'எல்லாருக்கும் வழக்கமாக் கொடுக்கறதுதான், இதுக்காக உங்ககிட்ட நான் சலுகை எதையும் எதிர்பார்க்க மாட்டேன், இதுக்கு முன்னால இருந்தவங்களுக்கும் நான் கொடுத்திருக்கேன்'னு சொல்லி, நான் வேண்டான்னு சொன்னப்பறமும், வற்புறுத்தி, என் கையில கவரைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு..."

"கேட்டு வாங்கினா என்ன, கேக்காம வாங்கினா என்ன, கான்டிராக்டர்கிட்ட பணம் வாங்கறது குற்றம்தானே? லஞ்சம் வாங்கிட்டு, எந்த விதிமீறலையும் செய்யலேன்னு சொல்றீங்க! அந்த கான்டிராக்டரோட நாம செஞ்சுக்கிட்ட ஒப்பந்தத்தை ரத்து செஞ்சுட்டேன். இப்ப, உங்களுக்கு தண்டனை கொடுக்கணும். நியாயமாப் பாத்தா, உங்க மேல போலீஸில புகார் கொடுத்து உங்களை ஜெயிலுக்கு அனுப்பணும்!"

"அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க சார்! நான் இதுவரையிலும் எந்தத் தப்பும் செஞ்சதில்ல. இனிமே செய்யவும் மாட்டேன். இந்த ஒரு தடவை, என்னை மன்னிச்சுடுங்க சார்!" என்றான் பார்த்திபன், கெஞ்சும் குரலில்.

"தப்பு செஞ்சவங்களை மன்னிச்சுடலாம்னா, அப்புறம் தண்டனை கொடுக்கிற நடைமுறை எதுக்கு இருக்கு? குறைஞ்சது, உங்களை சஸ்பெண்ட் பண்ணணும். ரெண்டு நாள் எந்த வேலையும் செய்யாம சும்மா உக்காந்திருங்க. ஆர்டர் வரும். நீங்க போகலாம்" என்றார் கஜேந்திரன், கண்டிப்பான குரலில்.

பார்த்திபன் ஏதோ பேச வாயெடுத்து பிறகு எதுவும் பேசாமல் அறையிலிருந்து வெளியேறினான்.

டுத்த நாள், மதுரையிலிருந்த கிளை அலுவலகத்துக்கு கஜேந்திரன் மாற்றப்பட்டிருப்பதாக அவனுக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

சஸ்பென்ஷன் உத்தரவை எதிர்பார்த்து அச்சத்துடன் இருந்த கஜேந்திரனுக்கு, அந்த வேலைமாற்றல் உத்தரவு ஒரு எதிர்பாராத ஆறுதலாக இருந்தது. அவனுடைய மேலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்ததும், மதுரை அலுவலகத்தின் மேலாளரின் கீழ் அவன் ஒரு சாதாரண அதிகாரியாகத்தான் பணியாற்ற வேண்டும் என்பதும் அவனுக்கான தண்டனைதான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஆயினும், போலீஸ் புகார், சஸ்பென்ஷன் போன்ற கடுமையான நிலைகளுக்கு அவனை உள்ளாக்காததே, பொது மேலாளர் கஜேந்திரனின் கருணைதான் என்பதை அவன் உணர்ந்தான்.

பொது மேலாளரைப் பார்த்து நன்றி தெரிவித்து விட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் செல்ல அவன் முயன்றபோது, அவனைப் பார்க்க கஜேந்திரன் மறுத்து விட்டார்.

"சார்! பிஸியா இருக்காரு. இப்ப அவரைப் பாக்க முடியாது, உங்களை உடனே மதுரை ஆஃபீஸ்ல போய் ஜாயின் பண்ணச் சொன்னாரு" என்றான் பொது மேலாளரின் பியூன்.

துரை அலுவலகத்தின் மேலாளர் பூபதிக்கு, பொது மேலாளர் கஜேந்திரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் இருவரும்  அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுபவர்கள், நண்பர்கள் கூட.

"சொல்லு, கஜேந்திரா!" என்றார் பூபதி.

"உன் ஆஃபீசுக்கு பார்த்திபன்னு ஒரு அதிகாரியை இங்கேந்து மாத்தி இருக்கேன். அவர் நல்ல திறமையான அதிகாரிதான். ஆனா, ஏதோ கொஞ்சம் தடுமாறி, ஒரு தப்புப் பண்ணிட்டாரு. அதனால, இப்ப அவருக்கு மானேஜர்ங்கற அந்தஸ்து இல்ல. ஆனா, நீ அவருக்கு முக்கியமான பொறுப்பு கொடுத்து, உனக்கு அடுத்த இடத்தில அவர் இருக்கற மாதிரி வச்சுக்க. அநேகமா, இனிமே அவர் எந்தத் தப்பும் பண்ணாம, பொறுப்பா நடந்துப்பாருன்னு நினைக்கிறேன். அடுத்த வருஷம் நீ ரிடயர் ஆகும்போது, உன்னோட இடத்தில அவரை மானேஜரா ஆக்கலாம்னு பாக்கறேன் - அவர் நல்லா வேலை பார்த்து, நீயும் சிபாரிசு பண்ணினாத்தான்!" என்றார் கஜேந்திரன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)

குறள் 562:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

பொருள்: 
ஆட்சியை நீண்ட நாள் வைத்திருக்க விரும்புபவர், கடுமையாக தண்டிப்பது போல் துவங்கி, தண்டனையை மென்மைப்படுத்த வேண்டும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...